Friday, February 17, 2017

கனடாவில் 8.1 மில்லியன் டொலர் மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஒன்று கனேடிய பொலிஸாரால் கைது!

கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் அஜெக்ஸ் பிரதேசத்தில் வைத்து சஞ்சீவன் பாலசுப்பிரமணியம், சுகன்யா பஞ்சலிங்கம் ஆகியோர் உட்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி ஆவணங்களை கொண்டு வியாபார,தனிநபர் வங்கி கணக்குகளை திறந்து கடன் அட்டைகள், வங்கி கடன் என்பனவற்றை பெற்றுள்ளதுடன். Benz, BMW போன்ற விலை உயர்ந்த  ஆடம்ப வாகனங்கள் கொள்முதல் செய்தமை தெரியவந்துள்ளதுடன்.

பெருமளவு ஆவணங்கள், வங்கி கடன் அட்டைகள், கணனிகள், கைதொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக. 42வது டிவிசன் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில். கடந்த 8 மாதங்களாக இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.  [வீடியோ இணைக்கப்பட்டுள்ளது]



No comments:

Post a Comment