சீனாவைச்
சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், நாடுகளுக்கு இடையே நீண்ட தூரம் பறக்கும் விமானங்களில்
3ஜி `வை-பை' சேவையை வழங்கவிருக்கிறது.
இந்த சேவை நவம்பர் 12-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஷாங்காயிலிருந்து நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டோரன்டோ நகரங்களுக்கு இயக்கப்படும் போயிங் 777-300ER விமானங்களில் செயற்கைக்கோள் மூலம் வை-பை வசதி ஏற்படுத்தி தரப்படும்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு இச்சேவை பிற விமான சேவைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment