Friday, August 3, 2012

நீரிழிவு நோயாளருக்கு இனிப்பான செய்தி

இரத்தத்தில் சீனியின் அளவை குறைக்க வகை செய்யும் ஹோர்மோன் என்ற நாளமில்லா சுரப்புத் திரவம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிற நிலையில், இக்கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
 
தற்காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே பெரும் தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற் பயிற்சி செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம் உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம் உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்த நாளமில்லா சுரப்புத் திரவத்தை எலிகளுக்கு சோதனை முறையில் செயற்கையாகச் செலுத்திப் பார்த்ததில் உடல் பருமனுக்கும் நீரிழிவுக்கும் மருந்தாவது காணப்பட்டது.
 
மனிதர்களிடத்தும் இச்சோதனை வெற்றியடையும் என்றும் விரைவில் இன்சுலினுக்கு மாற்றாக இத்திரவத்தை குருதியில் செலுத்துவதன் மூலம் நீரிழிவு குறைபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்றும் டானா- ஃபார்பர் புற்றுநோய் மைய விஞ்ஞானி ப்ரூஸ் ஸ்பைகில்மென் கூறியுள்ளதாக அமெரிக்க மருத்துவ சஞ்சிகையொன்று தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment