[வீடியோ இணைக்கப்பட்டுள்ளது] குஞ்சர்கடை பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர்பலியாகியுள்ளனர்.பருத்தித்துறையில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த நியாப் அமைப்புக்கு சொந்தமான பிக்கப் வாகனம் வேககட்டுப்பாட்டை இழந்த நிலையில் குஞ்சர்கடை பகுதியில் விபத்திற்கு உள்ளாகியது.
வீதியின் அருகே இருந்த பனைமரத்துடன் மோதியதில் வாகனத்தில் இருந்த மூவரில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றைய நபர் மந்திகை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் துன்னாலை வடக்கு கரவெட்டியை சேர்ந்த வாகனசாரதியான கணேசமூர்த்தி பார்த்தீபன் வயது-23 என்பவரும், யாழ் பல்கலைக்கழக உடல்கல்வி விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவனான செல்வநாயகம் கோதிநாத் வயது-23 ஆகியோரே சம்பவ இடத்தில் பலியானவர்கள் ஆவர். இது குறித்த விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment