Friday, April 8, 2011

பாழடைந்த கிணற்றில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

யாழ்.கரணவாய் வடக்கு நவிண்டில் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து வயோதிபர் ஒருவருடைய சடலத்தை வல்வெட்டித்துறை பொலீசார் இன்று மீட்டுள்ளனர். கரணவாயைச் சேர்ந்த 56வயதான பரமலிங்கம் சர்வானந்தம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

No comments:

Post a Comment